பரபரக்கும் சிலம்பம் போட்டி… சண்முகத்தை தோற்கடிக்க சிங்கப்பெண்ணை களம் இறக்கும் சௌந்தரபாண்டி

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா‌. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி தன்னுடைய பிறந்தநாளில் சிலம்பம் போட்டி வைத்து அதற்கு தலைமை தாங்கி 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை கொடுக்க முடிவெடுக்க, சண்முகம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சௌந்தரபாண்டி பஞ்சாயத்தை கூட்டி சிலம்பம் போட்டி நடத்தப் போவதை பற்றி சொல்லிக் கொண்டிருக்க, அங்கு வரும் சண்முகம் பரிசு தொகையை யார் மூலமாக கொடுக்கப் போறீங்க என்று கேட்க, கோபப்படும் சௌந்தரபாண்டி ஒரு கட்டத்தில் எம்எல்ஏ மூலமாகத்தான் கொடுக்கப் போவதாக சொன்ன சரி பணத்தை எண்ணி சரியா வையுங்கள் கள்ள நோட்டு இல்லாமல் நல்ல நோட்டா வையுங்க, ஜெயிக்க போறது நான்தான் என்று சொல்கிறான்.

இதை கேட்ட சௌந்தரபாண்டி சண்முகத்துடன் வாக்குவாதம் செய்ய, வைகுண்டம் சௌந்தரபாண்டியன் சட்டையை பிடிக்க, பிரச்சனை பரபரப்பாகிறது. நீ இந்த போட்டியில் கண்டிப்பா ஜெயிக்கணும், உன் அம்மாவைப் பத்தி தப்பா பேசுனவன வாயடைக்க வைக்கணும், இல்லன்னா உன்னை கொன்னு போட்ருவேன் என்று சண்முகத்திடம் சொல்லி விட்டு வருகிறார் வைகுண்டம். வீட்டில் சொன்னது ஒரு பக்கம் ஃபேக்டரி செய்து கொண்டிருக்கிற மறுபக்கம் சௌந்தரபாண்டியன் சண்முகத்தை ஜெயிக்க விடக்கூடாது என புலம்பிக் கொண்டிருக்கிறான்.

பாக்கியமும் இசக்கியும் சண்முகம் தான் ஜெயிப்பான் என்று சொல்கின்றனர். இதனால் சௌந்தரபாண்டி இந்த சிலம்பாட்டத்தை பெண்கள் சிலம்பாட்டமாக மாற்ற, ஒரு பெண்ணை வந்து சந்தித்து போட்டிக்கு கூப்பிட அவரும் வருவதாக வாக்கு கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment