பால் குடத்தில் ஆசிட் கலப்பு… முத்துப்பாண்டியால் ரத்னாவுக்கு காத்திருக்கும் ஆபத்து..!.

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா கல்யாணம் நல்லபடியாக நடிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு பால் குடம் எடுக்க கோவிலுக்கு வந்துள்ள நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இசக்கியும் பாக்கியமும் கோவிலுக்கு கிளம்ப முத்துப்பாண்டி எங்க போறீங்க என்று கேட்க இசக்கி கோவிலுக்கு என்று உளறி விடுகிறாள், எதற்கு என்று கேட்க பாக்கியம் உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கணும்னு தான் வேண்டிக்க போறோம் என்று சொல்ல நான் நம்ப மாட்டேன் என்று சொல்லும் அவன் நானே கோவிலில் விட்டு விடுகிறேன் என்று கூட்டி செல்கிறான்.

கோவிலில் ரத்னா பால் குடம் எடுக்க போகும் விஷயம் முத்துபாண்டிக்கு தெரிய வருகிறது. இதனால் அவளை பழிவாங்க முடிவெடுத்த முத்துப்பாண்டி, பாலில் ஆசிடை கலந்து ரத்னா தூக்கி செல்லும் போது அந்த பானையை உடைத்து அவள் முகத்தை சிதைக்க திட்டம் போடுகிறான். பால் குடத்தில் யாருக்கும் தெரியாமல் ஆசிடையும் கலந்து விடுகிறான்.

தன்னுடன் கூட்டி வந்தவரிடம் உண்டிகோலை கொடுத்து குறி பார்த்து அடிக்க சொல்ல, அவன் தடுமாற, முத்துப்பாண்டி குறியை சரியாக வைத்து அடிக்கிறான். சரி நானே அடிக்கிறேன் என்று முடிவெடுத்து காத்திருக்க ரத்னா பால் குடத்தை தூக்க தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment