சௌந்தரபாண்டியை அந்தரத்தில் தொங்க விட்ட ஷண்முகம்! முத்துப்பாண்டி செய்யும் அடுத்த சதி

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியை சந்தித்த கனி தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு என்னை என் அண்ணன் கிட்ட இருந்து பிரிக்க நினைசீங்கனா கழுத்தை அறுத்துட்டு செத்து போய்டுவேன் என்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கனி இப்படி பேசி விட்டு அங்கிருந்து கிளம்ப ஷண்முகமும் பரணியும் ஒளிந்து கொள்கின்றனர். கனி சென்ற பிறகு உள்ளே வரும் பரணி சௌந்தரபாண்டியை பார்த்து ஒரு குடும்பத்தை பிரிக்க நினைக்கறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று திட்டுகிறாள்.

அதன் பிறகு மீனாட்சியிடம் இதான் கனி, ஒழுங்கா ஊருக்கு கிளம்பி போங்க என்று திட்டுகிறாள். அடுத்து ஷண்முகக் சௌந்தரபாண்டியனின் கழுத்தை நெறித்து அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அதிர்ச்சி இதுவே கடைசியா இருக்கணும், திரும்பவும் என் தங்கச்சிகளை என்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ண கொன்னுடுவேன் என்று மிரட்டி விட்டு செல்கிறான். இவர்கள் கிளம்பியதும் மீனாட்சி மயக்கம் போட்டு விழுகிறாள்.

அடுத்ததாக வீட்டுற்கு வந்த கனி எதுவுமே நடக்காதது போல இருக்க ஷண்முகம் சாப்பிட்டியா என்று கேக்க கனி இல்லை என்று சொல்ல அவனே அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு பாசத்தை பொழிந்து கவனித்து கொள்கிறான். கனி எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் இருக்கிறாள். அதனால் நமக்கும் எதுவும் தெரியாதது போலவே இருக்கட்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

மறுபக்கம் மயங்கி விழுந்த மீனாட்சியை செக் செய்த டாக்டர் மனதால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க, அவங்க நல்லா ஒய்வு எடுக்கணும் என்று சொல்லி செல்ல வேலுமணி ஊருக்கு கிளம்ப தயாராகிறார். உடனே சௌந்தரபாண்டி அவரை தடுத்து நிறுத்தி உங்க பொண்ணை நான் உங்ககிட்ட சேர்க்கிறேன் என்று சொல்ல முதலில் உன் பொண்ணை அங்க இருந்து கூட்டிட்டு வா, எங்க பொண்ணு கதையை நாங்க பார்த்துக்கறோம் என்று மூக்குடைகிறார் வேலுமணி.

இதனையடுத்து ஷண்முகம் கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது ஒரு நபர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்ல ஷண்முகம் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறான், என் பொண்டாட்டி என்னை விட்டு பிரிந்து போக போறா, அவ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் சாக போறேன் என்று சொல்ல ஷண்முகம் உங்க பிரச்னையை நான் சரி பண்ணி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

இந்த நேரத்தில் அங்கு வரும் முத்துப்பாண்டி இதை வைத்து கேஸ் போட பிளான் போட ஷண்முகத்துக்கும் அவனுக்கும் முட்டி கொள்ள கடைசியில் ஊர் மக்கள் பஞ்சாயத்தை கூட்டி பிரச்னையை தீர்க்க சொல்ல இதே பஞ்சாயத்தில் வைத்து சண்முகத்தை அவமானப்படுத்த பிளான் போடுகிறான் முத்துப்பாண்டி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment