ஆனந்தை அலேக்காக தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்தை கைது செய்ய வீட்டுக்கு வந்த போலீஸ் மீனாட்சி கம்ப்ளைன்ட் கொடுத்ததாக சொன்ன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கார்த்திக் அபிராமியிடம் ஆனந்த் செய்தது பெரிய தப்பு. அதனால அவனுக்கு கொஞ்ச நாளைக்கு ஜெயிலில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று சொல்ல, அபிராமியின் அதற்கு சம்மதம் தெரிவிக்க, போலீஸ் ஆனந்தை கைது செய்து சிறையில் தள்ளுகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா மற்றும் ராஜேஸ்வரி என இருவரும் கூட்டு சேர்ந்து ஆனந்தை தங்களது கைக்குள் கொண்டு வர திட்டம் போடுகின்றனர். ஸ்டேஷனுக்கு வரும் ராஜேஸ்வரி நீ செய்தது பெரிய தப்புதான் இருந்தாலும் நான் உன்ன பெயிலில் எடுக்கிறேன்.

உன்னை நம்பி வந்த ரியாவுக்கு தானே சப்போர்ட் பண்ணனும் என்று பேசுகிறாள். அதுமட்டுமின்றி நான்தான் உன்னை பெயிலில் வெளியே எடுத்தேன் என்ற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா பெரிய பஞ்சாயத்து ஆகிடும் என்று சொல்ல ஆனந்தம் இப்போதைக்கு வெளியில் வந்தால் போதும் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டு இவர்களுடன் கைகோர்க்கிறான்.

வெளியே வந்த ஆனந்த் கோபத்துடன் வீட்டுக்கு வந்து இனிமே எதுவும் சரிப்பட்டு வராது ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பி என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க, சொத்த பிரிங்க என்று கேட்க அபிராமி உடைந்து போக, கார்த்திக் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் கொஞ்சம் அமைதியா இரு, பார்த்துக்கலாம் என்று ஆனந்தை அமைதிப்படுத்துகிறான். அபிராமி உடைந்து போயிருக்க அவளுக்கும் ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment