பிரித்தானியாவுக்கு Visitor Visa வில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

by Lifestyle Editor

பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோர், பிரித்தானியாவிலிருந்தபடியே தம் சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சலுகை, 2024, ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Visitor Visaவில் வருவோர், தாங்கள் தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்கவேண்டிய சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவாறு தொடரலாம்.

ஆனால், அவர்களுடைய முதன்மையான நோக்கம் பிரித்தானியாவிலிருந்தவாறு தங்கள் சொந்த நாட்டுப் பணியைத் தொடர்வதாக இருக்கக்கூடாது.

அவர்களுடைய முதன்மையான நோக்கம், சுற்றுலாவாகவோ, தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாகவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதாகவோ இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தங்கள் சொந்த நாட்டில் முடிக்கவேண்டிய பணியைத் தொடர்வதாக இருந்தால், அதற்கு அனுமதி உண்டு என கூறப்படுகின்றது.

அதாவது, மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது, காணொளிமூலம் கூட்டங்களில் பங்கேற்பது போன்ற தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணிகளைச் செய்ய மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் சுற்றுலா போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வரும்போது, அவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Related Posts

Leave a Comment