அரை கம்பத்தில் பறந்த பிரித்தானிய கொடி : இளவரசி கேட் தொடர்பில் வெளியான செய்தி

by Lifestyle Editor

பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் ஒரு புகைப்படமும், அதனுடன் இளவரசி கேட்டை தொடர்பு படுத்தும் செய்தியொன்றும் சமூக ஊடகங்களில் வைலானதையடுத்து, அது குறித்தான உண்மைச் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், மன்னரானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுக்கு வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆகவே, இளவரசி கேட், வேல்ஸ் இளவரசியாகின்றார்.

அத்துடன், இளவரசி கேட், Irish Guards என்னும் பாதுகாவலர்களின் Colonel of the regiment என்னும் பொறுப்பையும் வகிக்கிறார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் மாதம் 17ஆம் திகதி) St Patrick’s Day தினத்தையொட்டி, இந்த பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடந்தது. அதில் இளவரசி கேட் கேட் கலந்துகொள்ளவில்லை.

எனினும் அவர் இல்லாத நிலையிலும், வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் காட்சிகளும் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வைரலாகின.

St Patrick’s Day தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், இன்னொரு பக்கம் இளவரசி கேட் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

சிலர் இந்த இரண்டு விடயங்களையும் இணைத்து, இளவரசி கேட் இறந்துவிட்டார். அதனால்தான் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.

பின்னர், எக்ஸின் Fact check குழுவினர் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி குறித்த உண்மையை ஆராய்ந்தபோது, அது மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment