மருத்துவமனையில் பயந்து நடுங்கும் தர்ஷினி!

by Lifestyle Editor

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரின், இன்றைய ப்ரோமோ வெளியாகி சீரியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தர்ஷினி கடத்தப்பட்ட காட்சிகள் காட்டப்பட்டு வந்தது. இதை பார்த்த சீரியல் ரசிகர்களும், நெட்டிசன்களும் எப்போது இந்த காட்சிக்கு எண்டு கார்டு போடுவீர்கள் என்று கேட்கும் அளவுக்கு சென்ற நிலையில், ஒரு வழியாக போலீசார் தர்ஷனியை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நேற்றைய எபிசோடில், தர்ஷினி மற்றும் ஜீவானந்தத்தை தேடி காட்டுக்குள் சென்ற ஐபிஎஸ் அதிகாரி கொற்றவை தர்ஷினி கீழே மயங்கி கிடப்பதை பார்த்து… அவரது பத்திரமாக அழைத்து வருகிறார். பின்னர் இது குறித்து குணசேகரனுக்கு போன் போட்டு சொல்ல, அவர் என் பொண்ணு கிடைச்சுட்டாளா என அனைவருக்கும் கேட்கும் படி சத்தமாக பேசுகிறார். பின்னர் தர்ஷனியை பார்க்க குணசேகரன், கதிர், ஞானம், ஆகியோர் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள புரோமோவில், “தர்ஷினி அப்பா என்ன காப்பாத்துங்க.. அப்பா என்ன காப்பாத்துங்க… என கண்களை மூடிக்கொண்டே பயந்து நடுக்கமான குரலில் பேசுகிறார். பின்னர் குணசேகரன், அப்பா வந்துட்டேன் இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நடிக்கிறார். பின்னர் “ஈஸ்வரி… ஜனனி மற்றும் சக்தியிடம், ஒருவேளை அவர் ஏதோ பண்ணிட்டு வந்து, போலீஸ் இப்படி சொல்றாங்களா? என பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கும் தர்ஷினியை, கதிர் – ஞானம் பார்க்க கூடாது என கரிகாலன் தடுக்கிறார். பின்னர் ஞானத்திடம்…வீட்டுக்கு போய் உன் பொண்டாட்டியும் முந்தானைய பிடிச்சுக்கோ என கரிகாலன் பேச, கதிர் மருத்துவமனை என்றும் பார்க்காமல் கரிகாலுடன் அடிதடியில் இறங்குகிறார். பின்னர் போலீசார் கதிரை அடக்கி அங்கிருந்து அழைத்துச் செல்கின்றனர். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

எனினும் தர்ஷினி கண் விழித்த பின்னர், தன்னை கடத்தியது அப்பா குணசேகரன் என்கிற உண்மையை சொல்லி, காப்பாற்றியது ஜீவானந்தம் என்பதை சொல்லப் போகிறாரா? அல்லது பயத்தில் நடுங்கியபடி உண்மையை மறைக்கப் போகிறாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment