‘வானத்தை போல’ சீரியல், 1000 எபிசோடுகளை கடந்து சாதனை..

by Lifestyle Editor

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் ‘வானத்தைப் போல’. பாசமலர் பட பாணியில், அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்… 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.

இந்த சீரியல் துவங்கப்பட்ட போது, சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடிக்க, துளசியாக ஸ்வேதா நடித்தார். ஒரு கட்டத்தில் இருவருமே இந்த தொடரில் இருந்து விலக… ஸ்ரீ குமார் சின்ராசு கதாபாத்திரத்திலும், மான்ய ஆனந்த் துளசியாகவும் நடிக்க கமிட் ஆகினர்.

தொடர்ந்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் மூன்று வருடங்களுக்கு மேல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை, சீரியல் குழுவினர் கொண்டாடி வருவதோடு… ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு சில சீரியல்கள், ஓரிரு வருடத்திலேயே எண்டு கார்டு போடப்படும் நிலையில்… மூன்று வருடங்கள் ஒரு சீரியல் நிலையாக ஒளிபரப்பாகி வருவது மிக பெரிய சாதனையாகவே சின்னத்திரை சீரியல் தரப்பில் பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட ஒரே மாதத்தில் டாப் 5 TRP லிஸ்டில் இணைந்தது. தற்போது வரை டாப் 3 பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

யூகிக்க முடியாத கதைக்களத்துடன் இந்த சீரியலை இயக்கி வருகிறார் இயக்குனர் ராமச்சந்திரன். இந்த சீரியலில் சாந்தினி பிரகாஷ், அஸ்வந்த் கார்த்தி, கீதா லட்சுமி, செந்தி குமாரி, மகாநதி ஷங்கர், மனோஜ் குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment