கனியை கைது செய்யும் முத்துப்பாண்டி.. ஷண்முகம் செய்யப்போவது என்ன?

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்கூலில் கனி பேக்கில் துப்பாக்கியை வைத்து கொண்டு தவித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கனி பதற்றமாக இருக்க டீச்சருக்கு சந்தேகம் வந்து பேக்கை திறந்து பார்க்க உள்ளே துப்பாக்கி இருந்து எடுத்து இது எப்படி வந்துச்சு என்று கேட்க கனி துப்பாக்கியை பிடுங்க போக அது வெடித்து சிதறுகிறது. இதனை தொடர்ந்து ப்ரின்சிபிள் முத்துபாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் விரைந்து வர விஷயம் அறிந்த ரத்னா பிரின்சிபாலிடம் போலீசுக்கு எல்லாம் போக வேண்டாம் என்று கெஞ்ச இது போலீஸ் கேஸ் எதுவும் பண்ண முடியாது, தகவல் சொல்லியாச்சு என்று சொல்கிறார்.

உடனே ரத்னா பரணிக்கும் சண்முகத்துக்கும் தகவல் கொடுக்க இருவரும் பதறியடித்து ஓடி வருகின்றனர். அடுத்து முத்துப்பாண்டி ஸ்கூலுக்கு வர கனி அவளிடம் கெஞ்ச எப்பவும் திமிரா தானே பேசுவ, இப்போ என்ன கெஞ்சுற என்று நக்கல் அடிக்க ரத்னா உனக்கு எங்க மேல தானே கோவம் அவளை விட்டுடு என்று கெஞ்சுகிறாள்.

முத்துப்பாண்டி உன்கிட்ட காதலை சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருந்த போது கரிசனம் இருந்தது, ஆனால் இப்போ ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி கனியை ஜீப்பில் ஏற்ற பரணி வந்து விடுகிறாள், பரணியும் முத்துபாண்டியிடம் கெஞ்ச எதுவும் பண்ண முடியாது என்று ஜீப்பை எடுக்க ஷண்முகம் வண்டியோடு வந்து கீழே விழுந்து எழுந்து ஜீப் பின்னாடியே ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment