ஜீவானந்தத்திடம் தர்ஷினி! தலைகீழாக மாறும் கதைக்களம்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தற்போதுள்ள கதைக்களத்தில் தர்ஷினி பெற்ற தந்தையால் கடத்தப்பட்டு சில ரவுடிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கிருந்து தப்பித்த தர்ஷினியை ஜீவானந்தம் தான் மீட்டுள்ளார்.

ஆனால் குணசேகரன் கூறியது போன்று தர்ஷினி ஜீவானந்தத்தின் கையில் இருப்பது அவருக்கு எதிராகவே இருக்கின்றது.

பொலிசாரின் குழப்பத்திற்கு தர்ஷினி வாயைத் திறந்து கூறினால் தான் உண்மை என்ன என்பது வெளிவரும்.

Related Posts

Leave a Comment