இந்த வார டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்…

by Lifestyle Editor

இந்த வாரம் 11.36 டிஆர்பி புள்ளிகளுடன், முதல் இடத்தை பிடித்துள்ளது ‘சிங்கபெண்ணே’ சீரியல். இதுவரை ஆனந்தி அன்புவின் நல்ல மனதை புரிந்து கொள்வாரா என்கிற கேள்வியுடன் இந்த சீரியல் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது அன்பு நல்லவர் என்பதை புரிந்து கொண்டுள்ளார். ஆனால் அன்பு தான் தன்னுடைய அழகன் என்பது தெரிய வந்தால் என்ன நடக்கும்? ஆனந்தி மகேஷை காதலிப்பாரா? அல்லது அன்புவை காதலிப்பாரா என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 10.33 டிஆர்பி புள்ளிகளுடன், ‘கயல்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கயலும் – எழிலும் தங்களின் காதலில் ஜெயிக்க வேண்டும் என பல ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ஒருவழியாக தற்போது எழிலின் அம்மாவே மனம் மாறி, கயலை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொள்ள சம்மதித்து விட்டார். எனவே விரைவில் எழில் – கயல் திருமணம் பிரம்மாண்டமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு, தர்மலிங்கத்தால் அதற்குள் என்னென்ன புது பிரச்சனைகள் வரப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

கயல் சீரியலுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், 10.33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே உள்ளது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடர். யாரும் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பெத்த மகளையே கடத்தி வைத்துக் கொண்டு நாடகம் போடும் குணசேகரனின் சுயரூபம் வெளியே வரவேண்டும் என்பதே பல ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்த ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ சீரியல். இந்த வாரம் 9.59 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில், பொன்னியின் வில்லத்தனம் வெளியே வர துவங்கியுள்ளது. பொன்னியை சமாதானம் செய்து துளசி, மீண்டும் அவரை தன்னுடைய அண்ணன் சின்ராசுவுடன் சேர்த்து வைப்பாரா? அல்லது சந்தியா என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இனியா சீரியல் 8.96 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இனியாவை புரிந்து கொள்ளாமல் அவர் மீது கோபத்தை காட்டி வந்த விக்ரம், மனம் மாறி இனியவை ஏற்றுக் கொள்ளும் சமயத்தில், இனியா கொலை முயற்சி தாக்குதலில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமானவரை விக்ரம் கண்டுபிடிக்கும் போராட்டம் ஒருபுறம் நடக்க, இனியா பயந்தது போல் அவரின் நாத்தனார் அக்ஷயா வாழ்க்கையிலும் பிரச்சனை வர துவங்கிவிட்டது. எனவே கூடுதல் சுவாரஸ்யத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம், ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் சீரியல் ‘சுந்தரி’ 8 .34 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. கார்த்தியை இதுநாள் வரை சுந்தரி பார்க்காமல் இருந்த நிலையில், முதல் முறையாக கார்த்தி உயிரோடு இருப்பது சுந்தரிக்கு தெரிய வருகிறது. எனவே இனி இந்த சீரியல், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஆறாவது இடத்தில் உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர். 8.2 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ள இந்த சீரியலில், முத்து தன்னுடைய மச்சான் குறித்த ரகசியத்தை தொடர்ந்து குடும்பத்தினரிடம் மறைத்து வருகிறார். தம்பி செய்த குற்றத்தை மீனா கண்டுபிடிப்பாரா? ரோகிணியின் உண்மையான பெயர் மற்றும் விபரங்கள் தெரிய வருமா என்கிற விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடர் தான் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. தன்னுடைய கனவை மெல்ல மெல்ல எட்டிப் பிடித்துள்ள பாக்கியலட்சுமிக்கு, எப்படியும் ஆப்பு வைக்க வேண்டும் என சுற்றிக் கொண்டிருக்கும் கோபி. இந்த முறையாவது வெவ்வாரா? அல்லது அவர் செய்யும் முயற்சிகள் அவருக்கு எதிராக திரும்பப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எட்டாவது இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியில், இரண்டாம் பாகம் தொடராக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தொடர். ஆரம்பத்தில் கொஞ்சம் டல்லடித்த இந்த சீரியல், ராஜி – கதிர் திருமணத்திற்கு பின்னர் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த தொடர் 6. 50 டிஆர்பி புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஒன்பதாவது இடத்தில் உள்ளது ஆஹா கல்யாணம் சீரியல். 6.12 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில், சூர்யா மகாவை புரிந்து கொண்டு அவருடன் சேர்வாரா? கடத்திச் செல்லப்பட்ட மகாவின் அக்கா மீட்கப்படுவாரா? என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் கடைசி இடத்தை பிடித்துள்ளது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடர். கொலை வழக்கில் இருந்து தன்னுடைய மாமியாரை விடுவிக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் ஈஸ்வரிக்கு, அவருடைய மாமனார் கொலை செய்யப்பட்டதால் தான் இறந்தார் என்கிற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. எனவே தன்னுடைய மாமனாரை கொலை செய்த கொலையாளி யார்? என்ன காரணத்திற்காக மாமனார் கொலை செய்யப்பட்டார்? என்கிற விவரங்களை ஈஸ்வரி கண்டு பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் 5.62 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment