திருமந்திரம் – பாடல் 1785: ஏழாம் தந்திரம் – 8

by Lifestyle Editor

சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராண னிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றியே நேர்மை
பிறிக்க வறியாதார் பேயோ டொப்பரே.

விளக்கம்:

ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட உடலும், உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும், ஒன்றாக சேர்ந்து வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட மூச்சுக்காற்றும், அந்த மூச்சுக்காற்றை நிலையாகக் கொண்டு வாழ்கின்ற உயிரும், ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற உடலை சார்ந்து தாம் வாழ்ந்தாலும் இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை, உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள், ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப் போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்.

Related Posts

Leave a Comment