கிராமத்து கருவாட்டு குழம்பு..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

கருவாடு

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 2

பூண்டு – 15 – 20 பல்

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் பூண்டு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு நல்லா வதக்கவேண்டும்.

தக்காளி நன்கு மென்மையாக வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கலந்துவிட்டு கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு சமைக்கவும்.

இதற்கிடையே மற்றொரு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சுத்தம் செய்து அலசிய கருவாடை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வறுத்து கொள்ளுங்கள்.

10 நிமிடங்களுக்கு பிறகு குழம்பு மூடியை திறந்து வறுத்து வைத்துள்ள கருவாடை எண்ணெய்யுடன் அப்படியே போட்டு கலந்துகொள்ளுங்கள்.

ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருக்கும் என்பதால் ருசி பார்த்து தேவையென்றால் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும்.

அவ்வளவுதான் சுவையான பாரம்பரிய கிராமத்து ஸ்டைல் கருவாட்டு குழம்பு ரெடி.

Related Posts

Leave a Comment