திருமந்திரம் – பாடல் 1696 : ஆறாம் தந்திரம் – 14

by Lifestyle Editor

பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சாத்திக னாய்ப்பல தத்துவந் தானுன்னி
யாத்திக வேதநெறி தோற்ற மாகியே
யார்த்த பிறவியி னஞ்சி யறனெறி
சாத்தவல் லானவனே சற்சீட னாமே.

விளக்கம்:

நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் சாத்வீக (சாந்தம் / அமைதி) குணத்தோடு குருநாதர் அருளிய பல தத்துவங்களை தனது மனதிற்குள் வைத்து நினைத்து தியானித்து, இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதற்காக வேதம் சொல்லுகின்ற வழிமுறைக்கான தோற்றமாகிய தவ வேடமாகவே தாம் ஆகி, வினைகளின் பயனால் கிடைக்கப் பெற்ற இந்த பிறவிக்கும் இனி எடுக்கப் போகின்ற பிறவிகளுக்கும் பயந்து இனி பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின் வழிமுறையை கடை பிடித்து, தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க முடிந்தவன் எவனோ அவனே சிறந்த உண்மையான சீடன் ஆவான்.

Related Posts

Leave a Comment