திருமந்திரம் – பாடல் 1594 : ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
வுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.

விளக்கம்:

இறைவனே குருவாக வந்து எனது உயிரின் மூன்று விதமான சொரூபங்களாகிய உருவம் அருவுருவம் அருவம் ஆகிய மூன்றையும் தம் வசமாக கை கொண்டு அரியதான பொருளாகிய எனது ஆன்மாவையே தமது முத்திரையாக எடுத்துக் கொண்டு அனைத்திலும் பெரியவனும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை எனக்குள் வைத்து குருநாதராகிய இறைவன் தனது அருளால் எனது பேச்சு முழுவதம் இல்லாமல் போகும் படி செய்து அவரின் அன்பில் உருகி விடும் படி செய்து தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான பக்குவத்தை அடையும் படி என்னை ஆட் கொண்டு அருளினான்.

குறிப்பு:

உருவம் என்பது முழுவதுமாக கண்களால் காணும் படி உள்ள உடலாகும். அருவுருவம் என்பது ஒளியால் ஆன உடலாகும். அருவம் என்பது சூட்சுமத்தால் ஆன உடலாகும்.

Related Posts

Leave a Comment