மாண்டஸ் புயல்: 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் ..!

by Lifestyle Editor

மாண்டஸ் புயலின் காரணமாக 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 70 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டச் புயலாக வலுவடைந்தது. காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த மாண்டச் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மாண்டஸ் புயலினால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்றும் ராணிப்பேட்டை , காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை , திருவாரூர், ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயலின் காரணமாக தென்மேற்கு வங்க கடல் பகுதி இன்று மற்றும் நாளை மணிக்கு 70 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் தமிழகம், புதுச்சேரி அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், வட இலங்கை கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளை மறுதினமும் அதற்கு அடுத்த தினமும் மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Related Posts

Leave a Comment