சென்னை: பட்டாசு வெடித்த போது 38 பேர் காயம்

by Lifestyle Editor

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டியது. இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் , தீபாவளி அன்று காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்றின் தர குறியீடு 200 தாண்டியது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment