பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கு முடித்து வைப்பு .!

by Lifestyle Editor

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று அரசு கடந்த 22-ந் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கள் கிழமை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த நிலையில், இதனை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் வழக்கை ஜன.2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Posts

Leave a Comment