திருமந்திரம் – பாடல் 1589 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.

விளக்கம்:

வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாகிய இறைவன் அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையை சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள். இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற இந்த உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்து விட்டு தான் எனும் அகங்காரத்தை கொன்று தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டு கொண்டேனே.

Related Posts

Leave a Comment