திருமந்திரம் – பாடல் 1695 : ஆறாம் தந்திரம் – 14

by Lifestyle Editor

பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

தொழிலார மாமணி தூயான சிந்தை
யெழிலா ரிறைவ னிடங்கொண்ட போத
வழலார் விறகாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

விளக்கம்:

இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில் முழுமை பெற வேண்டுமென்றால், மாபெரும் மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து அவனருளால் தூய்மையாக ஆகி விட்ட சிந்தனையோடு பேரழகு நிறைந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கின்ற குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளை கடை பிடித்தால், நெருப்பில் மூடிய விறகு கட்டையும் எரிந்து நெருப்பாகவே ஆகி விடுவது போல தம்முடைய வினைகள் அனைத்தும் தம்மை விட்டு விலகி அழிந்து போய் விடும். அதன் பிறகு சிலம்புகளை அணிந்து பேரழகோடு இருக்கும் இறைவனின் திருவடிகளை தரிசித்து அவனது அருளை பெறலாம்.

Related Posts

Leave a Comment