திருமந்திரம் – பாடல் 1576 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

எல்லா வுலகிற்கு மப்பாலோ னிப்பாலாய்
நல்லா ருளத்து மிக்கரு ணல்கலா
லெல்லாரு முய்யக் கொண்டிங்கே யளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

விளக்கம்:

அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன் இந்த உலகத்தின் பக்கத்திலும் இருக்கின்றான். அவன் அன்பு கொண்ட நல்லவர்களின் உள்ளத்தில் இருந்து மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில் அருளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். இந்த அருளால் இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவனது திருவருளை வழங்குகின்றான். ஆதலால் சொல்லை முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும் நன்மையே வடிவான குருவாக இருப்பது பரிசுத்தமான சிவப் பரம் பொருளே ஆகும்.

Related Posts

Leave a Comment