திருமந்திரம் – பாடல் 1585 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பத்தியு ஞான வயிராக்க மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியில் ஞான முளைத்தலா லம்முளை
சத்தி யருடரிற றானெளி தாமே.

விளக்கம்:

இறைவனிடம் மிகுந்த பக்தியும் அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில் மிகவும் உறுதியாக நிற்பதும் பரம் பொருளை அடைவதற்கு விதையாக இருக்கின்றது. இந்த விதையானது தமக்குள் இருக்கின்ற சிவமே தாம் என்பதை உணர்ந்து அந்த இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து இருப்பதால் தான் கிடைக்கின்றது. இந்த நிலையில் இருக்கும் போது கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலையில் உண்மை அறிவான ஞானத்தை இந்த விதையே தமக்குள் முளைக்க வைக்கின்றது. ஆனால் இந்த ஞானத்தை முளைக்க வைப்பதற்கு தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது தனது அருளை கொடுத்தால் தான் எளிமையாக நடக்கும். இல்லாவிட்டால் கடினமே.

Related Posts

Leave a Comment