உக்ரைனில் 40 மில்லியன் டொலர்கள் ஆயுத ஊழல் மோசடி !!

by Lifestyle Editor

ரஷ்யாவுடனான போருக்காக 100,000 மோட்டார் குண்டுகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள அதேநேரம் உக்ரேனிய எல்லையை கடக்க முயன்ற ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அவர்களுக்கு எதிரான குறித்த மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment