டப்ளின் விமான நிலையத்தின் 102 விமான சேவைகள் இரத்து..

by Lifestyle Editor

இஷா சூறாவளியை அடுத்து அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தின் 100 ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளி காரணமாக 27 விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயர்லாந்தின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேநேரம் மேல் மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு கடுமையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இஷா சூறாவளி நெதர்லாந்தை அடையும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், Amsterdam’s Schiphol விமான நிலையத்தில் 130 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment