குடை மிளகாய் சன்னா மசாலா

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

ஊற வைத்த வெள்ளை கொண்டை கடலை – 1 கப்
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp
மிளகாய் தூள் – 1/2 tsp
மஞ்சள் – 1/4 tsp
கரம் மசாலா தூள் – 1/4 tsp
பிரிஞ்சி இலை – 1
கசூரி மேத்தி – 1/4 tsp
சாட் மசாலா – 2 சிட்டிகை
எண்ணெய் – 3 tbsp
உப்பு – தே.அ

செய்முறை :

முதலில் கொண்டை கடலையில் உப்பு கொஞ்சமாக சேர்த்து குக்கரில் 5 விசில் வரை விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை , பிரிஞ்சு இலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து சுருங்க வதக்குங்கள்.

இப்போது நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 7 நிமிடங்களுக்கு வதக்கவும்.

இப்போது மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் 1 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின் வேக வைத்த சுண்டலை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வையுங்கள். உப்பு கவனமாக சேருங்கள். ஏற்கெனவே சுண்டலில் உப்பு உள்ளது.

நன்கு கொதித்து சுண்டி வரும் வேளையில் கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் குடைமிளகாய் சன்னா மசாலா தயார்.

Related Posts

Leave a Comment