டிச.31 வரை சுங்க கட்டண விலக்கு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

by Column Editor

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 31 வரை சுங்க கட்டண விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் குடியிருப்புகளை சுற்றியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டும், பொது மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment