இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து- வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

by Lifestyle Editor

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான அஸ்லெஃப், வௌ;வேறு நாட்களில், டிசம்பர் 8ஆம் திகதி வரை வௌ;வேறு ரயில் நிறுவனங்களைப் பாதிக்கும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த இடையூறு ஏற்பட்டது. அத்துடன் டிசம்பர் 9ஆம் திகதி வரை கூடுதல் நேரத் தடையும் ஏற்படும்.

அஸ்லெஃப் பொதுச் செயலாளர் மிக் வேலன், தொழிற்சங்கத்திற்கு கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து மோசமான ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

ரயில் விநியோகக் குழுவானது, சமீபத்திய நடவடிக்கை ‘தேவையற்றது மற்றும் தவிர்க்க முடியாதது’ என்றும் தொழிற்சங்கத்தின் தலைமை ‘நியாயமான மற்றும் மலிவு சலுகையைத் தடுப்பதாக’ கூறியுள்ளது.

இந்த வேலைநிறுத்தங்கள் பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கும் விருந்தோம்பல் துறைக்கும் மேலும் துன்பத்தை ஏற்படுத்தும் என்று ரயில்வே அமைச்சர் ஹூ மெர்ரிமன் கூறியுள்ளார்.

மற்ற இரயில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அஸ்லெஃப் மற்றும் ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் ஆகிய இரண்டும் கடந்த 18 மாதங்களில் பலமுறை தொழிற்துறை நடவடிக்கையை எடுத்துள்ளன, ஆனால் ஆர்.எம்.டி. அதன் உறுப்பினர்கள் ஊதியச் சலுகையை ஏற்க வாக்களித்த பிறகு தற்போது வேலைநிறுத்தங்களை தொடர்வதை நிறுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment