கிழக்கு லண்டனில் இரண்டு சிறுவர்களின் சடலம் கண்டெடுப்பு: இருவர் கைது!

by Lifestyle Editor

கிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு மற்றும் ஐந்து வயதுடைய சிறுவர்கள் கார்ன்வாலிஸ் வீதியில் உள்ள வீட்டில் அவசர சேவைகளால் கண்டுபிடிக்கப்பட்டனர், மேலும் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

சுமார் 14:00 மணிக்கு அழைக்கப்பட்ட பின்னர் பொலிஸ்துறை மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை குழுவினர் இச்சம்பவத்துடன் இணைந்துக் கொண்டனர்.

சிறுவர்கள் இறந்தது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணும் ஆணும் இரு சிறுவர்களுக்கும் தெரிந்தவர்கள் என்று பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment