பேசும் பொம்மைகளாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்..

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விட்ட காரணத்தினால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குக்களை பெற்று ஜோவிகா வெளியேறியுள்ளார்.

இவர் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் கிட்ஸ் சோன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சில போட்டியாளர்கள் நடமாடும் குழந்தைகளாகவும் சிலர் பொம்மைகளாகவும் மாறியுள்ளனர்.

விசித்திராவை ஷோ பொம்மையாக மாற்றி பெட்டியில் வைத்து போட்டியாளர்கள் அழகு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த டாஸ்க்கை தொடர்ந்து என்னென்ன பிரச்சினைகள் வெடிக்க இருக்கின்றது என்பதனை அடுத்து வரும் ப்ரோமோக்களில் காணலாம்.

Related Posts

Leave a Comment