பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவிற்கு வராத அண்ணாச்சி…. காரணத்தை உடைத்த கமல்!

by Column Editor

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

தீப்பொறி பறக்க சிவகார்த்திகேயன் படப்பாடலுடன் கோலாகலமாக கிராண்ட் ஃபினாலே தொடங்கியது. முந்தைய சீசனில் இல்லாத நட்பு இந்த சீசனில் இருந்ததை கமலஹாசன் வெகுவாக பாராட்டினார்.

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களை வரவேற்றார். சின்னபொண்ணு, நாடியா சாங், தாமரை, ஐக்கி பெர்ரி, சிபி சக்கரவர்த்தி, தாமரை, அக்ஷரா,, இசைவாணி, வருண், சஞ்சீவ், ஸ்ருதி மேடையில் அமர்ந்து இருந்தனர்.

ஆனால், நமிதா மாரிமுத்து, அண்ணாச்சி, அபிஷேக், மதுமிதா ஆகியோர் கலந்து கொள்ள வில்லை.

ராஜூவின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாச்சி ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தகனர்.

இதற்கு கொரோனா பரவல் தான் காரணம் என்று கமல் கூறினார். கொரோனா பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அனைவரும் எப்போதும் பாதுகாப்புடன் இருப்பது ஆபத்தை தடுத்து கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment