பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தாக்கட்டப்பட்ட வனிதா விஜயகுமார்..

by Column Editor

வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தன்னை ஒரு மர்ம நபர் அடித்ததாகவும், முகத்தில் காயம் ஏற்பட்ட பீளீடிங் ஆவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு

“என்னுடைய பிக் பாஸ் விமர்சனத்தை முடித்தபின், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். எனது காரை தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தி இருந்தேன். காரின் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்முன் வந்தார். அவர் பிக் பாஸ் பிரதீப்பின் ஆதரவாளர் ஆவார்”.

“திடீரென அவர் என்னை கடுமையாக தாக்க துவங்கினார். ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா, நீ வேற அதுக்கு சப்போர்ட்’ என கூறி முகத்தில் அடித்தார். வலியில் கத்தினேன், என் முகத்தில் ப்ளீடிங் ஆனது. அந்த நேரத்தில் என்ன சுற்றி வேறு யாருமே இல்லை, அப்போது இரவு 1 மணி இருக்கும்”.

”நான் என் தங்கையை கீழே வரச்சொல்லி அழைத்தேன். இதை போலீசில் கூறும்படி அவள் என்னை வற்புறுத்தினால். ஆனால் நான் இந்த செயலில் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என கூறினேன். அதன்பின் நான் முதல் உதவி எடுத்துக்கொண்டேன்”.

”என்னை தாக்கிய மர்ம நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்னை பார்த்து பைத்தியகாரன் போல் சிரித்தான். அடுத்த சில நாட்களுக்கு நான் ஆன் ஸ்க்ரீனில் வரப்போவதில்லை. இடையூறுகளை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது” என கூறி பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது முகம் தற்போது எப்படி இருக்கிறது என்று குறித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Related Posts

Leave a Comment