இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது..!

by Lifestyle Editor

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது.

Related Posts

Leave a Comment