நான்காவது அணியாக உள்ளே செல்ல பாகிஸ்தான், நியுசிலாந்து இடையே போட்டி ….!

by Lifestyle Editor

நான்காவது அணியாக உள்ளே செல்ல பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் நியுசிலாந்து அணி இலங்கையோடு கடைசி போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு செல்லும்.

பாகிஸ்தான் அணி கடைசி போட்டியாக இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நியுசிலாந்தை தாண்டி அதிக ரன்ரேட் புள்ளிகள் கிடைக்கும்.

அதேபோல ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் வலிமை மிக்க தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்த அணியும் மிகப்பெரிய மார்ஜினில் வெல்லவேண்டும். இதனால் உலகக் கோப்பையின் அடுத்தடுத்து வரும் போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts

Leave a Comment