ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு..!

by Lifestyle Editor

சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பிரான்ஸின் நியூஃப்சாடெல்-ஹார்டெலோட் நகரத்தை விட்டு வெளியேறிய இரண்டு மணி நேரத்தில், இருவரையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது சம்பவத்தில், 60 பேருடன், உள்ளூர் நேரப்படி 13:00 மணிக்குப் பிறகு, பிரெஞ்சு கடற்பகுதியில் படகு விபத்தில் சிக்கியிருந்தோர், அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில்; சுமார் 57 பேர் படகு மூலம் மீட்கப்பட்டதோடு, மற்றொருவர் விமானம் மூலமும் மீட்கப்பட்டு பிரான்ஸின் பவுலோன்-சுர்-மெர் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment