பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் ..!

by Lifestyle Editor

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே அங்கு நடந்துவரும் போருக்கு தீர்வு காண முடியும் என பாப்பரசர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் நகரம் தற்போது இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஐ.நா. நிர்வாகிக்கும் வகையில் அந்நகருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க போவதாக தெரிவித்த அவர் போர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் தலைவர்களை வலியுறுத்த போவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் போப் பாப்பரசர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

Related Posts

Leave a Comment