போராளிகளைக் கொன்ற இஸ்ரேல் : தனது தாக்குதலை நடத்தியது ஹெஸ்பொல்லா!

by Lankan Editor

தமது போராளிகள் மூவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இன்று காலை இஸ்ரேலிய இராணுவ நிலையின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக ஹெஸ்பொல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

ஹெஸ்பொல்லா, ஈரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுக்களின் பிராந்திய வலையமைப்பின் மிகவும் வலிமையான அமைப்பு ஆகும்.

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்நிலையில் கலிலியில் உள்ள இரண்டு இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியதாக ஹெஸ்பொல்லா அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment