மியன்மாரில் இன்று நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு ..

by Lifestyle Editor

மியான்மரில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

மியான்மரில் உள்ளுர் நேரப்படி 8:15 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்கடியில் 14 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்றும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்த மாதத்தில் மியன்மாரில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த மே 2 ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .

Related Posts

Leave a Comment