மே 9ல் பிரதமராகும் மகிந்த ராஜபக்ச ..

by Lifestyle Editor

மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளிநாடு சென்றுள்ள அதிபர் வரும் 8 ஆம் திகதி நாடு திரும்புகிறார்.

அதன் பின்னர் பிரதமர் நியமனமும் அத்துடன் அமைச்சரவை மாற்றமும் இடம்பெறலாமென சொல்லப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தகவலை ஆளுங்கட்சி பக்கம் உறுதி செய்ய முடியவில்லை.

மகிந்த மீண்டும் பிரதமராவதை பசில் மற்றும் நாமல் விரும்பவில்லை என்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரே அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து மேலும் அறிய முடிந்ததுள்ளது.

Related Posts

Leave a Comment