வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? – இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்

by Lifestyle Editor

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5ல் வெற்றியும் (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 3ல் தோல்வியும் (குஜராத், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2 முறை) அடைந்து 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் மீண்டும் வீழ்ந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. சென்னைக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களில் பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment