இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Lifestyle Editor

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை இந்தியாவில், 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,39,515 லிருந்து 4,49,45,389 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,533 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 8,148 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,64,841 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 51,314 லிருந்து 49,015 ஆக குறைந்தது.

Related Posts

Leave a Comment