தமிழகத்தில் இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

by Lifestyle Editor

பொன்னியின் செல்வன் 2

விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளிவந்தது.

முதல் பாகத்திற்கு சிறந்த விமர்சனங்கள் வந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக புத்தகம் படித்த ரசிகர்களை படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வசூல்

விமர்சன ரீதியாக இப்படம் சற்று பின்னடைவை சந்தித்து இருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Related Posts

Leave a Comment