சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது …

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் குறைந்தது, நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் இண்டஸ்இந்த் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. டெக் மகிந்திரா பங்கின் விலையில் மாற்றம் இல்லை. அதேவேளையில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,912 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,580 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 139 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.267.72 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.72 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 169.87 புள்ளிகள் உயர்ந்து 60,300.58 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 44.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,813.60 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment