திருமந்திரம் – பாடல் 1687 : ஆறாம் தந்திரம் – 13

by Lifestyle Editor

அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்
விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

விளக்கம்:

மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அறிய மாட்டார்கள். அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை பார்க்க மாட்டார்கள். மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில் தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள். அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்து தியானித்து மாயையை கட்டுங்கள். அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள். இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.

Related Posts

Leave a Comment