திருமந்திரம் – பாடல் 1600 : ஆறாம் தந்திரம் – 2

by Lifestyle Editor

திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

கழலார் கமலத் திருவடி யென்னு
நிழல்சேரப் பெற்றே னெடுமா லறியா
வழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்
குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே.

விளக்கம்:

சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று உணரப் படுகின்ற நிழலோடு யானும் சேர்ந்து இருக்கும் படி இறைவனது திருவருளால் பெற்றேன். நீண்ட நெடும் அண்ணாமலையாக திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதியோடு சேருகின்ற எமக்குள் இருக்கின்ற ஜோதியின் உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு சேர்ந்த தலை முடியுடன் எமது உயிரும் சேர்ந்து அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம்.

Related Posts

Leave a Comment