திருமந்திரம் – பாடல் 1617 : ஆறாம் தந்திரம் – 4

by Lifestyle Editor

துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தா
னெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயு
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே.

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை படைத்த இறைவனே அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும் படைத்தான். கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து சிறிது விலகி நடந்தாலும் அந்த கடினமான முள் போன்ற துன்பங்களும் பாய்ந்து சாதகருக்கு அவர்கள் வழி தவறி செல்வதை நினைவூட்டும். சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து விலகி விடாமல் செயல் பட முடிந்தவர்களுக்கு அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.

Related Posts

Leave a Comment