கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு ..

by Lifestyle Editor

83கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.

மேலும் குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், பூநகரி பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment