திருமந்திரம் – பாடல் 1586 : ஆறாம் தந்திரம் – 1.

by Lifestyle Editor

சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

விளக்கம்:

அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி கொடுத்து அருளுவதும் இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும் படி வைத்து அருளியதும் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும். அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில் இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு இருக்கின்ற உறுதியான மன வலிமையை அடையும் படி செய்து அருளுகின்றார்.

Related Posts

Leave a Comment