திருமந்திரம் – பாடல் 1616 : ஆறாம் தந்திரம் – 4

by Lifestyle Editor

துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா
னுறைவது காட்டக முண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற ஞானத்தினால் தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் பார்த்தீர்கள். அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற அடியவர்கள் தம்முடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.

கருத்து:

தமக்குள்ளே மறைந்து இருக்கின்ற இறைவனை உணர்வதற்கு ஆன்மாவானது ஞானத்தை அறிந்து உணர்ந்து தகுதி பெறுகின்றது. அப்படி தகுதி பெற்று தமக்குள் உணர்ந்த இறைவனைப் போலவே நீங்களும் அனைத்தையும் துறந்து ஞானத்தை பற்றிக் கொண்டு இருந்தால் உங்களின் பிறவிகளை இறைவன் அறுத்து விடுவதையும் காண்பீர்கள்.

Related Posts

Leave a Comment