கார்த்திகை தீபம் – வீட்டுக்கு வந்த தீபாவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் ..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திராவின் போலி அம்மா அப்பா அபிராமி வீட்டில் தங்க நகைகளை திருடி அதற்கு பதிலாக போலி நகைகளை வைக்க திடீரென அந்த வழியாக மீனாட்சி வந்து மீண்டும் வேறொரு வேலையாக இவர்களை பார்க்காமல் திரும்பி சென்று விடுகிறாள்.

பிறகு கார்த்தி மீனாட்சிக்கு போன் செய்து தீபாவுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சொல்ல அவள் அதிர்ச்சி அடைந்து கடவுளிடம் சென்று வேண்டுகிறாள். அடுத்து டாக்டர் தீபாவை டிஸ்சார்ஜ் செய்ய ரூமுக்கு அழைத்து வரும் கார்த்திக் அவளுக்கு தோசை ஊற்றி கொடுக்க தீபா என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் என வருத்தப்பட கார்த்தி அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்கிறான்.

இந்த நேரத்தில் அபிராமி கார்த்திக்கு போன் செய்து எப்போ ஊருக்கு வர என கேட்க அவன் என் ஃப்ரெண்ட் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை, அவரை பார்த்து விட்டு நாளைக்கு வந்து விடுவேன் என சொல்ல அபிராமி யார் அந்த ஃப்ரெண்ட் என கேட்க பெங்களூர் ஃப்ரெண்ட் என சொல்லி சமாளிக்கிறான்.

மறுநாள் கார்த்தி மற்றும் தீபா சென்னைக்கு கிளம்பி காரில் வந்து கொண்டிருக்க கார்த்தி பரிகாரம் செய்த கோவிலுக்கு சென்று தீபா திரும்பி கிடைத்ததற்காக நன்றி சொல்கிறான்.

இங்கே அபிராமி கார்த்திக் வருவதால் கோவிலுக்கு கிளம்ப மீனாட்சி வீட்டு வேலைக்காரியையும் மார்க்கெட்டுக்கு போக சொல்கிறாள். பிறகு கார்த்தி மீனாட்சிக்கு போன் செய்து இன்னும் 10 நிமிடத்தில் வந்து விடுவோம். பின்னாடி பக்கம் வந்து தீபாவை மட்டும் கூட்டிட்டு போங்க என சொல்ல அவள் முன்பக்கம் வழியாகவே வாங்க, வீட்டில் யாரும் இல்லை என சொல்கிறாள்.

அடுத்து இருவரும் வந்து இறங்க மீனாட்சி இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டி செல்ல வீட்டு வாசலில் இருந்து மாலை இருவரது கழுத்திலும் விழ மீனாட்சி இதை பார்த்து சந்தோஷப்படுகிறாள். அடுத்து தீபா அந்த மாலையை பூஜை அறையில் வைக்க போக அங்கு விளக்கு ஏற்றாமல் இருக்கிறது. தீபா ஏன் என காரணம் கேட்க மீனாட்சி நான் உள்ளே வரக்கூடாது, நீயே விளக்கேற்று என சொல்ல தீபா விளக்கேற்றுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment