கார்த்தியை விட்டு பிரிந்து வந்த தீபா .. ‘கார்த்திகை தீபம்’ சீரியல் ..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தீபா கோர்டில் நிறுத்தப்பட்டிருக்க நீதிபதி அவளை விசாரணை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் கார்த்திக் தீபா தன்னுடைய மனைவிதான் என சொல்லி அங்கிருந்து அவளை அழைத்துச் செல்கிறான்.

தீபா அப்படியே யோசனையில் வர கார்த்திக் என்ன யோசிக்கிறீங்க என கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்கிறாள். சரி எனக்கு ரொம்ப பசிக்குது நீங்களும் காலையிலிருந்து சாப்பிட்டு இருக்க மாட்டீங்க, நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என சொல்லி வெளியே போக தீபா ரூமுக்கு சென்று முகத்தை அலம்பும் போது தாலி வந்து அவள் முன்னே விழ குருஜி சொன்னது அனைத்தும் நடந்து விட்டது என யோசிக்கிறாள்.

பிறகு இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அபிராமி கார்த்திக்கு போன் போட்டு மீட்டிங்கெல்லாம் எப்படி போச்சு என விசாரிக்க கார்த்திக் நடந்த விஷயங்களை சொல்ல அபிராமி சந்தோஷப்படுகிறாள். உனக்கும் நட்சத்திராவுக்கும் நல்லபடியா கல்யாணம் ஆயிடுச்சுனா இன்னும் சந்தோஷப்படுவேன் என சொல்லி போனை வைக்கிறாள்.

அதன் பிறகு தீபா கார்த்தியிடம் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்ல பிறகு தூங்கி எழுந்த கார்த்தி தீபாவை தேட அவள் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். கோவிலுக்கு எங்கேயாவது போய் இருப்பாங்க என நினைத்து கோவிலுக்கு போய் தேட கார்த்திக்கை பார்த்ததும் தீபா மறைந்து கொள்கிறாள். இந்த நேரத்தில் ஜானகி கார்த்திக்கு போன் செய்து தீபா போன் எடுக்க மாட்றா அவகிட்ட போனை குடுங்க என சொல்ல தீபா கோவிலுக்கு போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறான்.

பிறகு அங்கிருந்து வெளியே வரும் தீபா கார்த்திக்கு தெரியாமல் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வர துரையின் ஆட்கள் அவளை பார்த்து விட அவர்களிடமிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்யும்போது அந்த வழியாக வந்த காரின் மீது விழுந்து விபத்தில் சிக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment